பெண்ணிய அரங்கம் முனைவர் அ . மங்கை , பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர் , ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு கற்றல் , கற்பித்தல் , நிகழ்த்தல் நோக்கில் பெண்ணிய அரங்கம் பெண்ணுக்கும் அரங்கத்திற்குமான உறவு காலம் காலமாக இழுபறியாக உள்ள ஒன்று . பெண்ணுடல் பலர் பார்வைக்கு முன் தோன்றுவது , அசைவது , உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை தந்தைமை ஆதிக்க சமூகத்திற்கு ஒவ்வாமை கொடுப்பது . அதே சமயம் , கேளிக்கை , கூடுதல் இன்பம் நயக்கும் பெண்கள் தேவை எனக் கருதுவதும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டின் மறுபக்கம் . எனவே ஆடல் மகளிர் , பரத்தை என்ற தனிப் பிரிவை சங்க காலத்திலேயே நாம் காண்கிறோம் . இம்முறை இந்திய , ஆசிய நிலப்பரப்பெங்கும் இருந்து வந்துள்ளது . அரங்கில் தோன்றும் பெண்களை இழிவாகக் காண்பதும் இதனையொட்டி எழுந்ததே ! அதையெல்லாம் மீறி பெண்கள் பலர் இத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளனர் . வங்கத்தைச் சேர்ந்த பினோதினி தாசி தனது சுய சரிதையை அமர் கதா என்ற பெயரில் 1913 இல் எழுதினார் . மராத்தியிலும் பல பெண் கலைஞர்கள் தம் அனுபவங்களைப் பதிவு செய்தனர் . தமிழகத்தில் , எழுத்து பூர்வ பதிவு இல்
மதிப்பீட்டு மற்றும் பின்னூட்டு படிவம் submit செய்து விட்டேன்
ReplyDelete7 வது வினாவிற்குச் சரியான விடை எது ஐயா
ReplyDelete