நன்றி! நன்றி!! நன்றி!!!
நன்றி! நன்றி!! நன்றி!!! 11.05.2020 முதல் 17.05.2020 வரை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையும் இணைந்து நடத்திய ‘ கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக்கல்வி ’' இணைய வழி ஏழு நாள் சான்றிதழ் வகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக , கல்லூரிப் பேராசிரியர்கள் : பள்ளி ஆசிரியர்கள் ; ஆய்வாளர்கள் ; மாணவர்கள் ; அரசு அலுவலர்கள் : பிறதுறை சார்ந்த பெரியோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான கருதுகோளை வழங்கி ஊக்கம் தந்த புதுச்சோரி மையப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.சுப்பையா அவர்களுக்கும் இச்சான்றிதழ்க் கல்வி வகுப்பில் பங்கேற்றவர்களுக்குப் ‘ பழமரபு நாடகங்கள் ’ குறித்து உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் கோ. பழனி அவர்களுக்கும் ‘ வீதி நாடகங்கள் ’ குறித்து உரையாற்றிய சென்னைக் கலைக்குழுவின் நிறுவனர் திரு.பிரளயன் அவர்களுக்கும் ‘ நவீன நாடகங்கள் ’ குறித்து உரையாற்றிய மூன்றாம் அரங்கின் நிறுவ